Monday, November 2, 2009

வைகோவுக்கு கலைஞர் அழைப்பு




'பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறந்து
சிறுத்தையே வெளியில் வா!' என்று
புரட்சிக் கவிஞர் இந்நேரம் உன்னை
அழைத்திருப்பார்; அணைத்து மகிழ்ந்திருப்பார்
அய்யாவும் அண்ணாவும் இருந்தால் ஆரத் தழுவியிருப்பர்
அவர்களையெல்லாம் அந்தோ; இழந்துவிட்டோம்!
(இடையில் சில வரிகள் விடப்பட்டுள்ளது)
வையகத்தில் நிலைநாட்டிய வற்றாப்புகழ்
வைகோ; நீ வருக! வாழ்க!
தீரன் நீ- வீரன் நீ
திக்கெட்டும் பரவிடும்
தீக்காட்டுக்குள்ளேயும்
தென்றலாய் உலவிடும் தியாகி நீ-
தெளிவற்றோர் இதனை உணராத காரணத்தால்
ஒளியற்றுப் போன கருத்துக் குருடரானார்
'இம்' என்றால் சிறைவாசம்
'ஏன்' என்றால் வனவாசம் என்ற
உயிர்க்கொல்லி சர்வாதிகாரத்தை
உருசி கண்ட பூனைகள் எல்லாம் உலகில்
உருண்டுவிட்ட வரலாற்றை மறந்துவிட்டு
இருண்டுவிட்ட நெஞ்சத்தின் உடைமையாளர்கள்;
இரும்புக் கோட்டைக்குள் உன்னைப் போட்டு வதைத்தார்! பாவம்;
ஏறுநடைச் சிங்கத்தை எத்தனைதான் கொடுமை செய்தாலும்
எலியாக முயலாக அது மாறுவதுண்டோ?
புலியாகப் புயலாக நீ வருவாய் என்றே நானறிவேன்!
அப்படித்தான் அன்புத்தம்பி; நீ வந்துள்ளாய்
செப்படி வித்தைகள் இனிச் செல்லுபடியாகாதென்று
செங்கோலேந்திகட்கு வெறும் சேதிகளாய் அல்ல;
'சங்கொலி' முழக்கமே செய்திடுவாய்!- உன்
பெற்ற தாயின் முகம், உற்ற துணைவி முகம்,
மற்றுமுள்ள நண்பர்கள் மழலையர் சுற்றத்தின் முகம்
பூத்திருக்கும் இந்நாளில் உனைக் காணக்
காத்திருக்கும் என் கண்கள் என
எனையறிந்த நீ அறிவாய்; வேறு
உனைத் தவிர யார் அறிவார் இந்த உண்மை!



8.02.2004 அன்று கலைஞர் எழுதிய கவிதை இது. இப்போது படித்தால் சிரிப்பு சிரிப்பா வருது!

No comments:

Post a Comment